தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்டப் பொதுக்குழு (தேர்தல்) தூத்துக்குடி மாநகரத்தில் அமைந்துள்ள ஜாமியா பள்ளிவாசலில் வைத்து 30-12-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மெளலவி அல்ஹாஜ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள் தலைமையில், மாநில தேர்தல் கண்காணிப்பாளர் கம்பம் மெளலவி அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மௌலவி அல்ஹாஜ் A. அப்துல் அழீம் மஸ்லஹி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட தலைவராக மெளலானா அல்ஹாஜ் M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்களும் மாவட்டச் செயலாளராக முஹம்மது சாதலிபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி அல்ஹாஃபிழ் K.S.ஷம்சுத்தீன் ரியாஜி அவர்களும் மாவட்ட பொருளாளராக பேட்மாநகரம் நூருல் ஈமான் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் மௌலவி அல்ஹாஃபிழ் S.E. முஹ்யித்தீன் அப்துல் காதர் மஸ்லஹி அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் மேலும் இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்...