தர்மபுரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா வெள்ள நிவாரணம்
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம்,
தர்மபுரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் ஆகியோர்களின் சார்பாக 12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களில் சரி பாதி
300 குடும்பங்களுக்கான 21 பொருட்கள் மற்றும் பாய், கம்பளி உள்ளிட்ட பொருட்கள்
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் தலைமையில்
தர்மபுரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அரசு காஜியுமான மௌலானா ஃபஸ்லே கரீம் ஹழ்ரத் மாவட்ட செயலாளர் மௌலானா சித்தீக் ஹஜரத் உள்ளிட்ட தர்மபுரி உலமாக்கள் கண்காணிப்பில்,
ஸ்ரீவைகுண்ட தாலுகாவில் அதிகம் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம், காடுவெட்டி ஆழ்வார்தோப்பு சிவதாமங்கலம், இசக்கி அம்மன்புரம் சுந்தரபாண்டியபுரம் நாகலாபுரம் கிழக்கு ஆகிய 8 ஊர்களில் சகோதர சமுதாய மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்தப் பணியில் ஸ்ரீவைகுண்ட இமாம் ஹசன் அலி உஸ்மானி ஹழ்ரத் மற்றும் அந்த பகுதி இளைஞர்களும் ஜமாத்தார்களும் ஈடுபட்டு சிறப்பான ஒத்துழைப்பு நல்கினர்.
Comments
Post a Comment