தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்காசி மாவட்ட & வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
மற்றும் மாவட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத்தார்களால் திரட்டப்பட்ட தொகையை,
மாவட்ட சபையின் சார்பாக தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர் மௌலானா மௌலவி
முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத்
ஜாமிஆ பள்ளிவாசல் தலமை இமாம்
அப்துல் அழீம் ஹஜரத் மற்றும் மன்பஉஸ்ஸலாஹ் ஆசிரியர்கள்
முன்னிலையில் தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் வட்டார நிர்வாகிகள்
26-12-2023 செவ்வாய் கிழமை அன்று நேரில் நிவாரண தொகை ரூ.(624480.00)
ஆறு லட்சத்தி இருபத்தி நான்காயிரத்து நானூற்றி என்பது ரூபாய் நிதி வழங்கினார்கள்.
நிவாரண உதவி வழங்கிய தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஜமாஅத் தார்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா
நன்றியுடன்...
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
Comments
Post a Comment