இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபையின் வெள்ள நிவாரணம்
தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண பணிக்காக இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் இன்று 25-12-2023 காலை ராமநாதபுரம் மாவட்ட ஜமாத் உலமா சபையின் தலைவர் மௌலவி ஜலால் ஹழ்ரத் மாவட்ட செயலாளர் மௌலவி ஜலால் ஹழ்ரத் மாவட்ட பொருளாளர் ஸாஹிப் ஹழ்ரத் ஆகிய உலமா பெருமக்கள்
தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரிக்கு வருகை தந்து தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர் மாவட்ட அரசு காஜி மௌலவி சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மௌலவி ஷம்சுத்தீன் மஸ்லஹி உள்ளிட்ட உலமா பெருமக்களிடம் 6,00,000 (ஆறு இலட்சம்) ரூபாய் நிவாரண பணமாக வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
நிவாரண பணம் வழங்கிய ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா.
நன்றியுடன்
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை



Comments
Post a Comment